29/06/2020

குறள் வெண்பாவில் காதல்




#குறள்_வெண்பாவில்_காதல்

அழகென்ற சொல்லின் அகராதி கண்டால்
அழகிய நின்பெயரே; அங்கு
(1)

கவியெழுத எண்ணி கருதேடிச் சென்றால்
புவியெல்லாம் நின்னுருவே; போ!
(2)

இசையினைக் கேட்க இசைவோடு நின்றால்
திசையெங்கும் நின்குரலே; செ!
(3)

தவத்தினைத் தேடி தனிமையில் சென்றால்
கவனத்தைக் கொய்யுமே: கண்
(4)

களிக்கிற எண்ணம் கரைதாண்டி வந்தால்
துளிர்த்தெனுள் துள்ளுமே; சொல்
(5)

படிக்கிற நூலைப் புரட்டிடத் தொட்டால்
படிக்குமுன் பக்கத்தில் நீ
(6)

கணினித் திரையைக் கரங்களில் தொட்டால்
கணினிமுன் காட்சியாய் நீ
(7)

மகிழுந்தில் ஏறி வலம்வரும் முன்னே
மகிழுந்தாய் அன்றென் மனம்
(8)

உணவெனப் பற்றி உவந்திடும் முன்னே
கனவெனப் போனாயே ஏன்?
(9)

மறையென எண்ணி மனதிலே வைத்தால்
இறையெனெப் போனாயே ஏன்?!
(10)

✍️செ.இராசா

No comments: