21/06/2020

வராதேன்னு சொல்லுறாங்களே-


வராதேன்னு சொல்லுறாங்களே- கொரானா
தராதேன்னு சொல்லுறாங்களே (2)

சைனாக் காரன் செஞ்சதுக்கு
             சென்னைக் காரன் கழுவுணுமா?!
             சென்னைக் காரன் கழுவுணுமா?!
ஃபாரின் காரன் பண்ணதுக்கு
            ஃபைன நாங்க கட்டணுமா?
             ஃபைன நாங்க கட்டணுமா?
 என்ன வாழ்க்கை புரியலீங்கோ
எங்கள ஏங்க ஒதுக்குறீங்கோ?!
கண்ண கட்ட முடியலீங்கோ
சின்ன வயிறு பசிக்குதுங்கோ


..........(வராதே....)


மண்ண விட்டப் பாவத்துக்கு
                  மண்ண வாயில் போடணுமா
                  மண்ண வாயில் போடணுமா
எல்லாம் இங்கே சேர்ந்ததுக்கு
                 பொல்லா பேர சுமக்கணுமா
                 பொல்லா பேர சுமக்கணுமா
வந்த சனத்த வாழ வச்சால்
வாழ்க்கை இப்படி மாறிடுமா?
உங்க சனத்த ஓதுக்கி வச்சால்
உலகம் உங்களை விட்டிடுமா?!

..........(வராதே....)

✍️செ.இராசா
(சென்னை நண்பர் கொடுத்த சூழ்நிலையை உள்வாங்கி உடனேயே படைத்த பாடல். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன)

No comments: