14/06/2020

வயசு மேல வயசு ஏறி



#வயசு மேல வயசு ஏறி
மயக்கம் போட வைக்குது
புதுசு போல பழசு மாறி
புதிரு போட்டுப் பார்க்குது

இப்பத் தானே பிறந்ததுபோல்
இப்ப எனக்குத் தோனுது
அப்ப எந்தன் பிள்ளைவந்து
அப்பன் என்று கொஞ்சுது

பள்ளிக் கூடம் போனகதை
பல்ல இளிக்க வைக்குது
கள்ளியில சொன்ன கதை
கண்ணில் இன்னும் நிக்குது

டவுசர் போட்ட காலம்வந்து
தவுசன் வால்டா மின்னுது
அவசரமா பிள்ளை வந்து
ஆப்பிள் போன நோண்டுது

என்ன வாழ்க்கை என்னவென்று
எண்ணம் வந்து தொலைக்குது
எண்ணம் போலே எல்லாமென்று
இன்னும் இன்னும் ஏங்குது

✍️செ.இராசா

(இந்த பனியனைப் பார்த்து தோன்றிய வரிகளே இவை)

No comments: