10/06/2020

எனக்கு அவனை நன்றாகத் தெரியும்....

எனக்கு அவனை நன்றாகத் தெரியும்....

நிலையாமை பேசும் அவன் தான்
நிலையற்றோர் கண்டு
நிலைகுலைகின்றான்

அன்புடமை பேசும் அவன் தான்
அழுக்குப் பொதிகளுக்காய்
அழுது புலம்புகிறான்

கவிதைமழை பொழியும் அவன் தான்
கதைக்க மொழியின்றி
கண்ணீர் வடிக்கின்றான்

உள்ளதை உரைக்கும் அவன் தான்
உள்ளத்தில் வலியோடு
உலவிக் கொண்டிருக்கிறான்

தெளிவாய் தியானிக்கும் அவன்தான்
தெரியாதோர் செய்கைக்காய்
தன்னையே வதைக்கின்றான்

எனக்கு அவனை நன்றாகத் தெரியும்...

✍️செ.இராசா

No comments: