05/06/2020

எது கவிதை?



#எது_கவிதை?

எதுகையும் மோனையும்
எப்போதும் மாறாமல்
அடிகளின் அளவுக்குள்
அசைசீர் மீறாமல்
இலக்கண வரம்பிற்குள்
இயற்றுகிற ஒன்றே.........கவிதையா?

உணர்ச்சியின் உந்துதலில்
உள்ளக் கிளர்ச்சியுற்று
அடிமன எண்ணங்கள்
அப்படியே எழுச்சியுற்று
மரபை உடைத்தெறிந்து
மனம்போல் படைப்பதே.... கவிதையா?

நறுக்கென்று சுருக்கமாய்
நச்சென்று சொல்லாமல்
இன்னும் எத்தனை நாள்
இப்படியே செய்வீர்கள்..?!!
என்றிவரைச் சாடிவிட்டு
எங்கிருந்தோ இறக்குவதே... கவிதையா?

இது எதிலும் சேராமல்
........புது விதமாய் உடைபோட்டு
....புரியாத படிமங்களில்
.........புதிர்போல நடைபோட்டு
எவருக்கும் புரியாமல்
ஏதேதோ செய்வதே....கவிதையா?!

இது கவிதையா?
அது கவிதையா?

எது கவிதை என்பதெல்லாம்
அது தரும் பலன் பொறுத்தே...
இது கவிதை என்பதெல்லாம்
அது பெரும் மனம் பொறுத்தே..

✍️செ. இராசா

No comments: