21/06/2020

எங்க ஊர் கண்மாய்



வானம் பார்த்த பூமியில
வந்து விழும் தண்ணியில
குளமெல்லாம் ரொம்பயில
குடங்குடமா மனங்குளிர
அம்மணமாய் ஆடுமுங்க
அது அனுபவிச்சாப் புரியுமுங்க..

செம்மண்ணு பூமியில
சேருகின்ற தண்ணியில
செங்குருதி நிறமேறி
செம்மையா உருமாறி
கண்மாயாய் மாறுமுங்க
அது கண் மாயா இல்லீங்க...

✍️செ. இராசா

(எங்க ஊர் கண்மாய் படம் பார்த்தவுடன் மனம் அம்மணமாய் மாறியபோது எழுந்த வரிகள்)

மனமார்ந்த நன்றி Sanjay Ramu தம்பி

சிவகங்கை மாவட்டம்
ஊர்: அம்மன் பட்டி

No comments: