07/06/2020

அதிசயம் ஆனால் உண்மை 3

#அதிசயம்_ஆனால்_உண்மை_3_
****************************************
(இதற்கு முந்தைய இரண்டாம் பதிவு இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=3386104548081042&id=100000445910230&sfnsn=mo)

தமிழில் உவமை என்றால் என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும். அதாவது, நமக்குத் தெரியாத ஒன்றைத் தெரியவைக்க தெரிந்த ஒன்றின் மூலமாக ஏற்றிச் சொல்வதற்கும் அல்லது தெரிந்த ஒன்றையே மேலும் ஒன்றோடு தொடர்பாக்கிக் கவித்துவமாகச் சொல்வதற்கும் பெரும்பாலும் உவமை பயன்படுத்தப்படுகிறது.

அதுதான் தெரியுமே.....அது எதற்கு என்கின்றீர்களா?! இதோ வருகிறேன்.

திருக்குறளின் தன்மையை விளக்க ஔவையார் ஒரு குறளில் அவர் பயன்படுத்திய உவமைதான் இன்று நாம் பார்க்க இருப்பது.

“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்”

-திருவள்ளுவமாலை
(11ஆம் நூற்றாண்டு )

அணுவின் அளப்பறிய ஆற்றலை அறிந்த ஔவையார், திருக்குறளின் பெருமையை அணுவை உவமையாக வைத்துச் சொல்வதைக் கவனியுங்கள்.

அதாவது அணுவைத் துளைத்து ஏழு கடலையும் புகட்டியதுபோல மிகவும் சிறிய அளவிலான குறளில் அளப்பரிய கருத்துகள் உள்ளதாம். இங்கே ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஆம், இங்கே நாம் குறளின் பெருமையை அறிவதோடு
அணுவின் ஆற்றலையையும் அறிகின்றோம்.

அவர் அணுவை உவமையாக்குகிறார் என்றால் அந்த அணு பற்றித் தெரியாமலா நம் மக்கள் இருந்திருப்பார்கள்.

உங்கள் அனைவருக்கும் அணு என்றால் தெரியும்.. இருப்பினும் ஒரு பார்வை

இந்த பேரண்டத்தில் நாம் காணும் அனைத்துமே அணுக்களின் கூட்டு. இதை வெகு எளிதாகச் சொல்வதென்றால், சிறு வயதில் களிமண்ணால் விளையாடும்போது வண்டி, பொம்மை என்று பற்பல உருவங்கள் செய்து விளையோடுவோமல்லவா??! மேலும் இப்படி நாம் என்னதான் பல உருவங்கள் செய்தாலும் இவை அனைத்தும் உருவானது களிமண் என்று அறிவோம்தானே?!. அதைப்போலவே, நாம் காணும் அனைத்துப் பொருட்களும் (நீர், நிலம், நெருப்பு, கோள்கள்......அண்டம், பிண்டம்) என அனைத்துமே அணுக்களால் ஆனதே.

அறிவியல் பூர்வமாகச் சொல்வது என்றால் ஒரு பொருளை எடுத்து உடைத்துக் கொண்டே (பகுத்தல்) போகும்போது அதற்குமேல் உடைக்கமுடியாத ஒன்றே அணுவாகும். அணுக்களின் அமைப்பையும் அதன் சேர்க்கையையும் பொருத்து தனிமங்கள், வாயுக்கள், நீர்மங்கள்.... என்று அழைக்கின்றோம்.

இந்த அணுவை வேகமாக ஒரு சக்தியைக் கொண்டு தாக்கினால் அதில் அளப்பறிய ஆற்றல் வருகிறது என்று நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது (ரமணா படத்தில் வருவதுபோல.‌‌....ஏன்டா இப்பதான் நீங்க...). அதன் விளைவே அணுகுண்டு மற்றும் அணுஉலைகள். (அதனால்தான் நாங்க அணுபற்றி தெரிந்தாலும் அதைத் தொந்தரவு செய்யவில்லை)

அணுவை வைத்து பல அளவீடுகள் உள்ளதென்று திருமூலர் முதல் பல சித்தர்கள் சொல்கிறார்கள். அதாவது.‌‌அணு, தேர்த்துகள், பஞ்சிழை, மயிர், மணல், கடுகு, நெல், விரல், சாண், முழம்....... இப்படிப் போகிறது.

இப்போது சொல்லுங்கள், நம் தமிழினம் அனைவருக்கும் முன்னோடிதானே...

No comments: