06/06/2020

ஊதக்காத்து வீசயில



#ஊதக்_காத்து_வீசயில
காதல் நெஞ்சில் வேர்க்குதடா
மேகத் தூரல் சந்தத்தில
மோகச் சாரல் சிந்துதடா
....ஏதோ ஏதோ எந்தன் உள்ளே
....தாலே லேலோ ராகம் போலே...
....ஆத்தி ஆத்தி என்ன ஆச்சு
....ஏத்தி விடுதே உந்தன் பேச்சு
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ டா
ஹய்யோ மெய்யோ பொய்யோடா..

........................(ஊதக் காத்து

கொரானா என்னக் கொரானா போடா
கவ்விக் கொள்(ல்)வதில் நிகர்நீ தாண்டா
ஜனன‌ம் மரணம் மாயை போடா
(இச்)சணமே நிச்சயம் வாழ்வோம் வாடா
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ டா
ஹய்யோ மெய்யோ பொய்யோடா..

........................(ஊதக் காத்து

கோபம் என்னக் கோபம் போடா
காமன் பள்ளியில் குருநீ தாண்டா
இரவும் பகலும் தினமும் ஏன்டா
விரிந்த இதயம் இருகிடத் தாண்டா
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ டா
ஹய்யோ மெய்யோ பொய்யோடா..

........................(ஊதக் காத்து

இன்னும் இன்னும் லாக்டவுன் ஏன்டா
என்றும் உந்தன் ஆப்பிள் நான்டா
ஐசு(ice) போட்ட கூல்டிரிங்ஸ் ஏன்டா
ஐஸில் (eyes) வச்சப் போதை நீடா..
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ டா
ஹய்யோ மெய்யோ பொய்யோடா

✍️செ.இராசா

(தமிழ்ச்சோலையில் கவிப்போம் சுவைப்போம் தலைப்பிற்காக எழுதிய பாடல்)

tagTag PhotopinAdd Lo

No comments: