02/07/2020

முதல் நாள் தெரியவில்லை..

முதல் நாள் தெரியவில்லை..
அதன் வலியும் வேதனையும்...
ஆனால் இரண்டாம்நாள்...
அப்புறம் மூன்றாம் நாள்...
ஐயோ....எப்படிச் சொல்வேன்?!!

டிக் டாக் தடை உத்தரவால்..
செயலிழந்துபோன கைப்பேசிகள்போல்
உனைப் பிரிந்த காரணத்தால்
உயிரிழந்துபோன மெய்ப்பேசியானேன்

வெட்கத்தை விட்டு சொல்கிறேன்

உன்னோடு உறவாண்ட
ஒவ்வொரு நாளும்..
நான் என்னையே இழந்தேன்
ஆனால்...இன்று
என்ன செய்வது
என் விரதம் தடுக்கிறதே...?!!

என் எண்ணத் தோனியை
என்ன தோனியில் விட்டாலும்
உன்னிலேற்றி உலாவருவாயே...
உன்னையா உதறிவிட்டேன்..
என்ன செய்வது
என் சபதம் தடுக்கிறதே..?!!

கொஞ்ச நாள்தானே...
கொஞ்சும் நாள் மலர...

அதுவரைக்கும் காத்திரு..
என் அன்பு முகநூலே....

✍️செ.இராசா


02.07.2020

#திரும்பி_வந்துட்டேன்னு_சொல்லு

No comments: