17/07/2020

இந்து மதம் என்றால் என்ன?




இந்து மதம் என்பது நமக்குப் பிறர் வைத்த பெயரே தம்பி

இந்தியாவில் ஆறு சமயங்களை இணைத்தபோது இப்படி ஆனது.

சைவம்-சிவனை வழிபட்டார்கள்
வைஷ்ணவம்-கிருஷ்ணன்
கௌமாரம்-முருகன்.
கணபதியம்-கணபதி
சௌரம்-சூரியன்
சாக்தம்-காளி....

இப்படி..... தனித்தனியாக இருந்தாலும். எல்லாமே ஒரே மாதிரி ஒன்றுக்கொன்று பிணைந்தும் அல்லது பிணைக்கப்பட்டும் இருந்தது.

இதுபோக..

சிறுதேவதை வழிபாடு
கொற்றவை போன்ற காளி வழிபாடு
ஐயனார் கருப்பர் போன்ற முன்னோர் வழிபாடு

இப்படி ..... தனக்கு மேல் உள்ள சக்தியை உருவமாகவும்,

உருவமே இல்லாமல் சிதம்பர
ரகசியம் என்று சொல்லப்படும் அருவமாகவும்

லிங்க வடிவில் அருவம் உருவம் கலந்த அருஉருவமாகவும் வணங்கபட்டு பல பல ....... வடிவங்களில் அல்லது வழிகளில் ஆனால் ஒரே பரம்பொருளையே வணங்கினோம் நாம்.

பின்னர் சமணம் பௌத்தம் என்று உருவாகி இந்தியாவெங்கும் பரவிய போது ஆதிசங்கரர் தோன்றி வாதம் செய்தார். அப்போது அனைத்து மதங்களையும் இணைத்தார் அல்லது அதுவாகவே இணைந்தது.

அவரின் #இடைச்செருகல் பற்றிய கேள்விக்கான விளக்கம்;

தங்களின் கேள்விக்கு வருவோம்

நாம் காணும் பல பாடல்கள்,சங்க இலக்கியங்கள், காவியங்கள் .....என அனைத்தும் ஓலைச்சுவடிகளில் நைந்து போன நிலையில் கிடைத்து அதைப் பல பிரதிகள் எடுத்து.....பல கைகள் மாறிய பின்னரே கிடைத்துள்ளது. அதில் பல வார்த்தைகள் தெரியாமல் இருந்தததால் பிரதி எடுத்தவர்கள் தானாக இட்டும் நிரப்பி உள்ளார்கள். சிலர் தானாக சில பாடல்களை சொருகியதாகவும் எல்லா இலக்கியங்களிலும் சொல்லப்படுவது உண்டு.

எது எப்படியோ....நாம் எல்லாவற்றிலும் உள்ள நல்லவைகளை எடுத்து அல்லவைகளை விடுவோமாக....

✍️செ.இராசா.

#அவரின்_பதில்

அண்ணா நான் குழம்பிய நிலையில் இருந்து விடிவு பெற்றுவிட்டேன் . இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றினை மிக எளிமையாய் புரிய வைத்தமைக்கு மிகுந்த நன்றி அண்ணா.

அந்தத் தம்பி வேறு யாருமில்லை. மணல் கடிகாரம் என்ற நூலின் ஆசிரியர் பனிப்பூக்கள் பார்த்திபன் தான் ‌

நன்றி தம்பி!!!
— with பனிப்பூக்கள் பார்த்திபன்.

No comments: