05/07/2020

கதிரவன் எழும்முன் கட்டிலைத் துறங்கள்




கதிரவன் எழும்முன்
கட்டிலைத் துறங்கள்

கேட்கெட்ஸ் அனைத்தையும்
தூங்க விடுங்கள்..

காலணி விடுத்து
காலார நடங்கள்...

பறவைகள் பேசும்
பாடையைக் கேளுங்கள்..

பூனையின் குறுக்கே
புன்முறுவல் செய்யுங்கள்...

நாய்களின் மொழியில்
நன்றி சொல்லுங்கள்...

எதிர்ப்படும் எதையும்
இறையென எண்ணுங்கள்...

ஒருமுறையேனும்
உங்களிடம் பேசுங்கள்...

எனில்...
எல்லா நாட்களும் வரமே‌.‌

✍️

மதுபட்ட நாவினுள் மட்டனை வைத்தால்
அதுபடும் பாடாய் அனைவரும் ஆனோம்
விடுகதை போட்டு மிரட்டிடும் வாழ்வில்
விடுமுறை தானே வரம்‌

✍️செ.இராசா

(பாடை- பாஷை-மொழி)

No comments: