22/07/2020

விவசாயம்


 
மழையே இல்லை
ஈரமாய் இருக்கிறது
கண்கள்

(1)

தூவிய வேகத்தில்
வேகமாய் வளர்கிறது
களை

(2)

உழுததன் பயனை
அறுக்கையில் அனுபவிக்கிறார்
இடைத்தரகர்

(3)

நன்றாய் உழைத்தாலும்
அடி வாங்குகிறது
விவசாயம்

(4)

✍️செ.இராசா

No comments: