27/07/2020

மெல்லச் சிரித்தாள்

  

படபடக்கும் இதயம்...
துடிதுடிக்கும் இமைகள்...
பார்க்கத் துடிக்கும் பார்வை...
பார்த்துவிடுவார்களோ என்ற பயம்..
நக்கல் செய்வார்களோ என்ற நாணம்
பேச வேண்டுமோ என்ற கூச்சம்..
என்ன நடக்குமோ எனும் ஆர்வம்..
எங்கிருந்தோ வந்த அச்சம்..
வியர்வையை துடைக்கும் வெக்கம்
இப்படி எத்தனையோ உணர்ச்சிகள்...

இதைக் கவனித்தபடியே
#மெல்லச்_சிரித்தாள்.
தன்னைப் பெண் பார்க்க வந்த
அந்தக் கடைசி மாப்பிள்ளையை.....

✍️செ. இராசா

See Less

No comments: