16/07/2020

ஆதி பகவன் வேலவன்டா


கந்தனைப் பேசும் கயவர்கள் கூட்டத்தால்
சிந்தைக்குள் வந்தது தீ
#குறள்_வெண்பா

 

தத்துவம் காணாத தற்குறிகள் யாவருக்கும்
தத்துவம் போற்றுகிற சத்தியத்தை போதிக்க
தத்துவ நாயகனே! சத்திய புத்திரனே!
வித்தகம் காட்டவெடு வேல்!
#ஒரு_விகற்ப_இன்னிசை_வெண்பா

#பாடல்
#மெட்டு_ஆடி_அடங்கும்_வாழ்க்கையடா

ஆதி பகவன் வேலவன்டா
ஆறு முகமே சாமியடா!

முந்தைக்கு முந்தைய மூத்தவன்டா- அவன்
உந்தைக்கும் முந்தைய தந்தையடா!

பெரியார் பேசினால் நாத்திகம்டா
பெரியவாள் பேசினால் ஆத்திகம்டா
நாயேநீ பேசினால் நாத் தீயும்டா
நான்இனி பேசினால் .....த்......ஓடிடுடா

✍️செ.இராசா

No comments: