04/03/2018

விண்ணைத்தாண்டி வந்துவிடு


மனிதரை இங்கே படைத்துவிட்டு
மதத்தை அவனுள் புகுத்திவிட்டு
குழந்தையைக் குருதியில் நனையவிட்டு
கொடூரத் தாண்டவம் ஆடுகின்ற
கொடுமை இனத்தை உலவவிட்டு
எங்கே நீயும் சென்றாயோ?!!
இங்கே நீயும் வாராயோ?!!

எத்தனை எத்தனைப் பிரிவுகளாய்
எதற்கு இத்தனை மதங்களைய்யா?!
மதங்கள் பிடித்த மிருகங்களால்
மனித இனமே அழியுதய்யா..

மண்ணில் மழலையைச் சாகடிக்கும்
மடையர் கூட்டத்தை அழிக்காமல்
விண்ணில் உறங்கிப் போனாயோ?!
விண்ணைத்தாண்டி வாராயோ?!

No comments: