19/03/2018

துளிகள்

கவிஞன் நிறைவடைந்தால்
கவிதைதான் வந்திடுமா?!!
கவிஞனின் உயிர்மூச்சே
கவிதையில் உள்ளதன்றோ...!!!
*************************************
ஒரு கவிதை
இன்னொரு கவிதையைப் பிரசவிக்குமானால்
அது மிகச்சிறந்த கவிதையாகும்
கவிதையில் உள்ளதன்றோ...!!!
*************************************
உருவமாய்த் தெரியும்
உரித்தால் ஒன்றுமில்லை
“நான்” வெங்காயம்போல..
கவிதையில் உள்ளதன்றோ...!!!
*************************************
அழுத்தம் அதிகமானால்
சீறி எழும் சுனாமியே
#பெண்
கவிதையில் உள்ளதன்றோ...!!!
*************************************

கசிந்துருகும் கவிதையில் உணர்ச்சி மிகுந்திருக்கும்.....😃😔😭🙂❤️
தேடிப்பிடிக்கும் கவிதையில் அறிவு
மிகுந்திருக்கும்...📚📕📔
உணர்ச்சி மிகு கவிதைகளே
உயிரோட்டமான கவிதையாக இருக்கின்றன....
அவை பெரும்பாலும் தேடாத பொழுதே பூக்கின்றன......💐🌷🌸🌼
சரியா?
*************************************
இன்று மூன்றாம் வகுப்பு படிக்கும் பையன் கற்றுக்கொடுத்தான்;சிங்கக்குட்டி- தவறு
சிங்கக்குருளை- சரியென்று
நன்றி ஐயா-

No comments: