19/03/2018

மாறு மாற்றம் வரும்....களஞ்சியம் கவிதைப்போட்டி (97)- வெற்றிக்கவிதை


97வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த திரு.சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும், மூன்றாம் இடத்திற்கு அடியேனின் கவிதையை தேர்வு செய்த நடுவர் திரு. வசந்த் சுப்பையா ஐயா அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



மாறு மாற்றம் வரும்
*******************
ஊரெல்லாம் சேறென்றும்
பாரெல்லாம் தீதென்றும்- இங்கே
யாரெல்லாம் சொல்கின்றார்?!!

ஆட்சிகள் மாறும்போதும்
காட்சிகள் மாறாத போதும்- யார்
சாட்சியாய் இருக்கின்றார்?!

வாக்கினை விற்றுவிட்டு
வாக்காளரைத் தேர்ந்தெடுத்து- யார்
வாய்கிழியப் பேசுகின்றார்?!

உள்ளூர் பொருள் தவிர்த்து
வெளியூர் பொருள் நுகர்ந்து- யார்
நம்மூரை நசுக்குகின்றார்?!!

தமிழ் பள்ளியில் சேர்க்காமல்
தமிழ் மொழியில் பேசாமல்- யார்
தமிழைத் தாழ்த்துகின்றார்?!

அறநூற்கள் பயிலாமல்
மனநூலைத் திருத்தாமல்- யார்
முகநூலில் போதிக்கின்றார்?!

மாறு மாற்றம் வரும்!
மாறுவோம் மாற்றம் வரும்- நாம்
மாறினால் மாற்றம் வரும்!

—-செ. இராசா—-

 https://www.facebook.com/groups/1535309520121292/search/?query=vasanth%2097

No comments: