31/03/2018

மௌனப் போராட்டம் --99வது களஞ்சியம் கவிதைப் போட்டி (வெற்றிக்கவிதை)

99வது களஞ்சியம் கவிதைப் போட்டி
***********************************
கிடைத்த இடம்: இரண்டாமிடம்
நடுவர்: திரு. கோபிநாத் ஐயா
குழுமம்: தமிழ்ப்பட்டறை
தலைவர்: திரு. சேக்கிழார் அப்பாசாமி ஐயா

🙏🙏🙏🌸மனமார்ந்த நன்றி🌸🙏🙏🙏

 

மௌனப் போராட்டம்
**********************
கட்சிகள் நடத்திடும் போராட்டம்-அது
காட்சிக்குச் சேர்க்கிற வெறுங்கூட்டம்!
ஆட்சியை எதிர்த்திடும் போராட்டம்-அது
சாட்சிக்குச் சேர்க்கிற வெள்ளோட்டம்!

மக்கள் நடத்திடும் போராட்டம்-அது
சிக்கல் தீராத வெற்றோட்டம்!
எங்கும் நடக்கின்ற போராட்டம்-அது
இங்கே எங்களின் தொடரோட்டம்!

வாழ்க்கையே தினமும் போராட்டம்-அது
வாழ்வியல் போதிக்கும் முன்னோட்டம்!
வெளியே நடக்கிற போராட்டம்-அது
வெற்றியை நோக்கிடும் நீரோட்டம்!

கௌதமர் நடத்திய போராட்டம்-அது
ரௌத்திரம் இல்லா அறிவூட்டம்!
பௌத்தம் புகுத்திய போராட்டம்-அது
மௌனத்தின் விதைக்கு செறிவூட்டம்!

மனதை உயர்த்திடும் போராட்டம்-அது
மனிதனின் வாழ்வை செழிப்பூட்டும்!
மதியை செதுக்கிடும் போராட்டம்-அது
விதியை மாற்றிட வழிகாட்டும்!

மனிதா மனிதா போராடு- நீ
மனிதத்தை உயர்த்திடப் போராடு!
மனிதா மனிதா போராடு- நீ
மனிதனாய் மௌனமாய்ப் போராடு!

—-செ. இராசா——


https://www.facebook.com/groups/1535309520121292/search/?query=99%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF 


No comments: