09/03/2018

அன்புத் தோழியே..களஞ்சியம் கவிதைப்போட்டி (95)- வெற்றிக்கவிதை


95 வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த திரு. சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும், இரண்டாம் இடத்திற்கு அடியேனின் கவிதையை தேர்வு செய்த நடுவர், திரைப்படப் பாடலாசிரியர் திரு. நிகரன் ஐயா அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
***************************************
அன்புத் தோழியே...

கர்ணனின் நட்பு பற்றி
காவியத்தில் படித்துள்ளேன்...
பெண்ணினக் கர்ணனாக
உன்னையேக் காணுகின்றேன்...

அகத்தின் அன்பெல்லாம்
அள்ளி அள்ளித் தருகின்றாய்..
வாஞ்சையைப் பொழிந்தேதான்
வருத்தத்தை போக்குகின்றாய்...

நாளும் பழகினாலும்
நட்பிலே புளிப்பு இல்லை...
காணும் பொழுதெல்லாம்
காட்சியிலே சலிப்பு இல்லை...

தேனோ திரவியமோ
தனியாய் நீ சுவைப்பதில்லை
பொன்னோ மரகதமோ
பொருட்டாய் நீ நினைப்பதில்லை..

ஆசையில்லாக் காரணத்தால்
சினம் உன்னை நெருங்கவில்லை..
அழுக்காறில்லா காரணத்தால்
மனம் உன்னை மறப்பதில்லை..

அறம் போற்றும் தோழியுனை
ஆண்டவனாய்க் காணுகின்றேன்...
மறம் கொண்ட மங்கையுனை
மனதார வாழ்த்துகின்றேன்....

என்றும் அன்புடன்...

—செ. இராசா—-


https://www.facebook.com/photo.php?fbid=1976898792627971&set=gm.1994622634189976&type=3&theater&ifg=1 

No comments: