27/03/2018

தமிழ்-3



ஒலியாக ஒரு வடிவம்
வரியாக மறு வடிவம்
இரண்டுமே மொழிக்கென்று
இருக்கின்ற பொது வடிவம்

இருவடிவும் உயிர்ப்போடு
இல்லாத மொழிகளுண்டு....
வரிவடிவம் இல்லாது
வழக்கிழந்த மொழிகளுண்டு..
ஒலிவடிவைப் பதியாது
ஒழிந்துபோன மொழிகளுண்டு...

ஒலியோடும் வரியோடும்
ஒன்றாகப் பயணித்து
சுயமாகத் தன்னெழுத்தை
நயமாக உருசேர்த்து
காலத்தின் ஓட்டத்தில்
காணாமல் போகாது
ஞாலத்தில் சிறக்கின்ற
நல்மொழிகள் சிலவற்றில்
செம்மொழியாய்த் திகழ்கின்ற
நம்மொழியைப் போற்றிடுவோம்

வாழ்க தமிழ்!

—-செ. இராசா

No comments: