25/02/2018

அசாம் மேகாலயா நினைவலைகள் -01






இந்தியத் தாயின் குழந்தையென
ஏழு சகோதர மாநிலங்கள்....
இறைவன் செய்த அற்புதத்தில்
ஏழும் எழில்மிகு ஓவியங்கள்....


அங்கொரு வேலைத் தேடிவரே
ஆசையில் உடனே கிளம்பிவிட்டேன்
அப்பா என்னுடன் துணைக்குவர
அசாம் மண்ணிலே கால் வைத்தேன்...

அப்பா...அப்பா...அப்பப்பா....
என்ன குளிரென வெடவெடத்தேன்
அச்சா....அச்சா....மாலும்... நகி....
எதுவும் தெரியாது நான் விழித்தேன்...

அப்படி இப்படி சமாளித்து
அங்கே வாழ்ந்திடப் பழகிக்கொண்டேன்..
அசாம் மேகாலயா மாநிலத்தின்
அற்புத அழகினை தினம் ரசித்தேன்....

மேகம் கொஞ்சிடும் மலை முகட்டில்
மோகம் கொண்டே மயங்கி நின்றேன் ..
எங்கும் ஓடிடும் நீர்ச் சுனையில்
என்னை நானே இழந்துவிட்டேன்...

நான்கு வருடமே வாழ்ந்தாலும்
நாளும் நினைவிலே வாழ்கின்றேன்...
என்னைச் செதுக்கிய மாநிலத்தை
என்றும் மனதில் வாழ்த்துகின்றேன்....

No comments: