28/03/2018

காதலின் சிறப்பு (குறளின் குரலில்)



அன்பான தன்னவனும்
அகத்தினிலே இருப்பதினால்
தேநீரைக் குளிரவைத்து
தேன்போல சுவைக்கின்றாள்...

கண்ணுக்குள் கருமணியாய்
காதலனே இருப்பதினால்
காண்கின்ற பொருளெல்லாம்
தானென்றே உணர்கின்றாள்...

உடலோடு உயிராக
உரியவனே உறைவதினால்
தன்னுடம்பே அழகென்று
தன்னையேக் கொஞ்சுகின்றாள்....

—- செ. இராசா—-

No comments: