31/12/2022

நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா? (ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரி)

 


(அந்தக் காலத்தில டாட்டா பிர்லா மாதிரி உள்ள பணக்காரங்களும், சாதியில் உயர்ந்த சாதின்னு சொல்றவுங்களுந்தான் படிக்க முடிஞ்சது. அதை மாத்துறதுக்குத்தான் திமுக உருவானது. அப்படி மாறி வந்த வரலாற்றை ஒரு சாதாரண தொண்டனின் மனநிலையில் பாடப்பட்ட பாடல் இது)
 
மெட்டு: ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரி
 
பல்லவி
 
நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
அட...நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
அட...மேல கீழ ஏதுமில்லை
கல்விகற்றா போதும்யா....
நான் டாடா பிர்லாவோட ஆளாயா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
 
சரணம்-1
 
அண்ணாவால் அன்றைக்கு எல்லோரும் ஒன்றாக
கழகம் பிறந்திடுச்சே
அச்சாரம் போட்டாரு ஈவெரா பெரியாரு
அவரு நம்மூரு'"சே"
பிடிச்ச முயலுக்கு
மூனுகாலு என்பதுபோல்
மனித உறவுக்குள்
சாதிசொல்லி தீ வைக்க
நீரென திராவிட முன்னேற்றக் கழகம்
தீமையைப் பொசுக்கி சரித்திரம்படைச்சது..
நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
அட...மேல கீழ ஏதுமில்லை
கல்விகற்றா போதும்யா
 
சரணம்-2 
 
நான் போறேன் முன்னால
நீ வாயா பின்னால
மெரினா கடற்கரைக்கு....
சொல்லாம சொன்னாரோ அண்ணாவும் அந்நாளில்
கலைஞர் ஐயாவுக்கு....
அடிச்ச அடியெல்லாம்
சிக்சரென செதருச்சு....
சிங்க நடைகண்டு
டெல்லிகூட பதறுச்சு....
எழுதும் வேகத்தில் எதிரிகள் அலற
வாழ்ந்தவரை அவர வெல்ல முடியல...
 
நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
ஹா ஆஅ ஆஅ
என் தாத்தா சாதாரண ஆளுயா..
அட...மேல கீழ ஏதுமில்லை
கல்விகற்றா போதும்யா
நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
 
✍️செ. இராசா

No comments: