08/12/2022

திருமாவளவன்

 


*பல்லவி*
************
அன்புக்குத்தான் கரங்கொடுப்போம்
அடக்கவந்தா எகிறிடுவோம்
அனைவருமே சரிசமம்தான் அண்ணாத்த...
உரிமைக்குத்தான் குரல்கொடுப்போம்
உறவுக்காக கைகொடுப்போம்
 
அதிலயென்ன தவறிருக்கு அண்ணாத்த...
தலைவரோட பாதையில அண்ணாத்த
தலைநிமிர்ந்து நடைநடப்போம் அண்ணாத்த
அண்ணலோட பாதையில அண்ணாத்த
அண்ணனோடு நடைநடப்போம் அண்ணாத்த- திருமா
அண்ணனோடு நடைநடப்போம் அண்ணாத்த
 
*சரணம்-1*
***********
கீழ மேல என்று பேசுறது யாருங்க
வேலை வெட்டியின்றி பொழைக்குமந்த கூட்டங்க
சாதி பேரச் சொல்லி சாடுறது யாருங்க
வானம் பார்த்தபடி துப்புகின்ற கூட்டங்க...
நீயும் நானும் இங்கே
வந்தவழி எங்கேங்க?
அன்னைவழி தானே
வந்தோமுனு சொல்லுங்க..
தலைவரோட பாதையில அண்ணாத்த
தலைநிமிர்ந்து நடைநடப்போம் அண்ணாத்த
அண்ணலோட பாதையில அண்ணாத்த
அண்ணனோடு நடைநடப்போம் அண்ணாத்த- திருமா
அண்ணனோடு நடைநடப்போம் அண்ணாத்த
 
*சரணம்-2*
*************
வீறு கொண்ட வேகம் போகுறதப் பாருங்க
நாமும் கூடநின்னு ஒத்துழைக்க வேணுங்க
கொண்ட கொள்கைக்காக தன்னைத் தந்ததாருங்க?
ஐயா திருமாதான் வாழும் காமராஜருங்க...
மேல மேல ஏறிப்
போகவழி என்னங்க?
அண்ணல் சொன்ன படியே
படிக்கிறது தானுங்க...
தலைவரோட பாதையில அண்ணாத்த
தலைநிமிர்ந்து நடைநடப்போம் அண்ணாத்த
அண்ணலோட பாதையில அண்ணாத்த
அண்ணனோடு நடைநடப்போம் அண்ணாத்த- திருமா
அண்ணனோடு நடைநடப்போம் அண்ணாத்த
 
 
சமத்துவமே சரித்திரமே
.....தலைவனிலோர் தனித்துவமே!
அமரனுமே உயரனுமே
.....அண்ணலைப்போல் அடையனுமே!
சமயமெல்லாம் தெளியனுமே
......சகலருமே சரிசமமே!
சுமந்ததெல்லாம் புரியனுமே
..... சூழ்நிலைய ஜெயிக்கனுமே...
 
வந்தாரு வந்தாரு அண்ணன் வந்தாரு- எங்க
அண்ணன் வந்தாரு....
அண்ணலோட பாதையிலப் போகச் சொன்னாரு
---மெதுவாப் போகச் சொன்னாரு
அப்புறமும் கேட்கலைன்னா மீறச் சொன்னாரு
---அத்து மீறச் சொன்னாரு

No comments: