23/12/2022

விக்ரமராஜா ஐயா பாடல்-2 ------ நாகூர் ஹனிபா குரலில்

 



பல்லவி

எத்தனை பேர்களின் சார்பாக
அண்ணாச்சி முன்னே நிற்கின்றார்...
அத்தனை வணிகரின் குரலாக
அண்ணாச்சி அன்றோ முழங்குகின்றார்..

அனைவரும் சரிசமம் தானே
அண்ணாச்சி பார்வையிலே...
ஏழையும் பொழக்கனும்தானே
ஐயாவின் கொள்கையிலே...

நல்லதைக் கொடுக்கனும்
.......அல்லதை ஒதுக்கனும்
நுகர்வதும் நம்மவர் தாங்களே....
அயலவர் ஒதுங்கனும்
.......கயவர்கள் திருந்தனும்
தமிழறம் காப்பவர் நாங்களே...

முழங்கட்டும் முழங்கட்டும் முழங்கட்டும் 

அறவழியேநம் குரல் முழங்கட்டும்....
உயரட்டும் உயரட்டும் உயரட்டும்- நம்
தலைவரால் வாழ்க்கை உயரட்டும்
 

சரணம்-1

பாரததேசம் பயனுறவேண்டி
பகிர்ந்திட வருவதும் நாங்களே..
மாநிலமெங்கும் பலதடைதாண்டி
வரிகளைத் தருவதும் நாங்களே...

எம்மால் வளர்ச்சி கிடைக்கயிலும்
எமக்கோ வளர்ச்சி கிடைக்கவில்ல
எதனால் தளர்ச்சி அடைகிறோம்?
அதனை உடைக்க முயல்கிறோம்
தலைவர் துணையில் வெல்லுவோம்...
தலைவர் துணையில் வெல்லுவோம்...

முழங்கட்டும் முழங்கட்டும் முழங்கட்டும் 

அறவழியேநம் குரல் முழங்கட்டும்....
உயரட்டும் உயரட்டும் உயரட்டும்- நம்
தலைவரால் வாழ்க்கை உயரட்டும்
 

சரணம்-2

வாடிக்கையாளர் மகிழ்ந்திட வேண்டி
விலைகளைக் குறைப்பதும் நாங்களே
கோரிக்கையாக அரசிடம் வேண்டி
சலுகையைக் கேட்பதும் நாங்களே...

நாங்கள் அள்ளிக் கொடுக்கயிலும்
நமக்கோ அதுவும் கிடைக்கவில்லை..
பதுக்கல் எதுவும் நடந்தாலும்
அதையும் அடனே தடுக்கின்றோம்...
தலைவர் வழியில் செல்லுவோம்..
தர்மம் நின்றிட வெல்லுவோம்...

முழங்கட்டும் முழங்கட்டும் முழங்கட்டும் 

அறவழியேநம் குரல் முழங்கட்டும்....
உயரட்டும் உயரட்டும் உயரட்டும்- நம்
தலைவரால் வாழ்க்கை உயரட்டும்

பறக்கட்டும் பறக்கட்டும் பறக்கட்டும்
வணிகர்கள் கொடியிங்கு பறக்கட்டும்
பிறக்கட்டும் பிறக்கட்டும் பிறக்கட்டும்
நமக்கினி காலம் பிறக்கட்டும்

✍️செ. இராசா

No comments: