12/12/2022

சின்னஞ் சிறிய வயதில்

 


சின்னஞ் சிறிய வயதில் எம்மை அறியாமலேயே சில பாடல்களை எழுதிப் பாடியுள்ளேன். அது ஏனோ திடீரென்று ஞாபகம் வந்தது. அதையே இங்குப் பதிவு செய்கிறேன்.
 
எனக்கு நிறைய அத்தைகள் இருந்ததால், அத்தை மகள்களுக்கும் பஞ்சமில்லை. அப்படி ஒரு அத்தை மகளுக்காகப் பாடிய பாடல்தான் இது..... உண்மையில் இதை எழுதவெல்லாம் இல்லை. நானும் என் தம்பிகளும் சேர்ந்து பாடுவோம். உண்மையில் இதை யார் முதலில் பாடினர் என்ற ஞாபகம் கூட இல்லை. இருந்தாலும் நானே ஞாபகம் வைத்துள்ளதால் நானாகத் தான் இருப்பேன் என்கிற ரீதியில் உரிமை கோருகிறேன்...😅😅😅. இவ்வளவு பெரிதாக சொன்னாலும் பாடல் வெறும் நான்கு வரிகள்தாங்க.....இதுக்குத்தானா இவ்வளவு பில்டப்பு....ம்ம்..சரி பாட்டைப் பாருங்க.
 
ஜானகிக் குட்டி
சவுக்காரக் கட்டி
கோதுமை ரொட்டி
கொண்டுவாடி குட்டி 
 
*சவுக்காரக் கட்டி என்பது சோப்பு
 
பாட்டு அவ்வளவு தாங்க....அடச்சே வெறும் நான்கு வரிகள்தானா.... அவ்வளவுதான்!
 
இதேபோல் என் ஊரைப்பற்றி ஒரு பாடல் அப்போதே எழுதிப் பாடியுள்ளேன். இது சத்தியமா நானே எழுதுனதுதாங்க. எட்டாவது படிக்கும்போது வந்த விஜயலெக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் பாடலின் ராகமென்று நினைக்கிறேன். 
ஆம்...அதேதான்...
 
தானானே தானனே
தானானே தானனனே
தானானே தானனே
தானானே தானனனே
 
என் ஊரு அம்மன்பட்டி
அதுக்குப் பக்கம் நகரம்பட்டி
பக்கத்துல வீழனேரி
அதுக்குப்பக்கம் அழகாபுரி
 
நீயும் வந்து பாரு- எங்க
ஊரை சுத்திப்பாரு.‌.(2)
 
வடக்கால மாந்தோப்பு
தெக்கால தென்னைந்தோப்பு
எல்லாமே இருக்குதுங்க
எங்கவூர்ல தானுங்க
 
நீயும் வந்து பாரு- எங்க
ஊரை சுத்திப்பாரு.‌.(2)
 
மேலும் ஞாபகம் வந்தால் எழுதுகிறேன்....
 
✍️செ. இராசா

No comments: