13/12/2022

புனைப்பெயர் சூட்டிக் கொள்ளத்தான் வேண்டுமா...!?

 


எழுத்தாளர்கள், கவிஞர்கள் கண்டிப்பாக புனைப்பெயர் சூட்டிக் கொள்ளத்தான் வேண்டுமா...!?
 
படைப்பாளியைவிட
படைப்புதான் தெரிய வேண்டும்
என்று நினைத்த காலத்தில் பெயரை வெளிக்காட்டாமல் புனைப்பெயரில் எழுதினார்கள். (அப்படியிருந்தும் வாசகர்கள் எழுத்து நடையை வைத்து கண்டுபிடித்து விடுவார்கள் என்பது வேறு)
 
இப்போது தனக்குத்தானே சூட்டுவது புனைப்பெயரல்ல பட்டப்பெயர்கள்.... காரணம் பெயருக்கு முன்னால் இவர்களே போட்டுக்கொள்(ல்)வதால்.... கண்டிப்பாக இது அசிங்கம் மட்டுமல்ல அநாகரிகமும்கூட...
யாராவது தன்னைத் தானே Mr...... என்று சொல்லிக் கொள்வார்களா? அப்படித்தான் இந்தப் பட்டங்களும். ஆனால், இதையெல்லாம் சொன்னாலும் பலரும் ஏற்பதில்லை. அவர்களின் எழுத்தின் தரமும் ஏற்றம் பெறுவதில்லை.
என்ன சரிதானே உறவுகளே.....?!!
 
✍️செ. இராசா

No comments: