18/08/2019

#அழகு பன்னி மூஞ்சி வாயென்கள்






#அழகு

மலர் அழகு
மழை அழகு
மழலை அழகு
மங்கை அழகு
திங்கள் அழகு
கடல் அழகு
கவி அழகு
தமிழ் அழகு
தரணியே அழகு

ஆம்...
அழகு எங்கும் கொட்டிக்கிடக்கிறது

அது காட்சியாய்ப் பார்க்கும்
புறக்கண்களுக்கு புலப்படாது!
அது கவிதையாய் ருசிக்கும்
அகக்கண்களுக்கே புலப்படும்!

லைலாவின் அழகை அறிய
மஜ்னுவின் கண்கள் வேண்டும்

ராஜாவின் அழகை அறிய
கவியின் கண்கள் வேண்டும்
😊😊😊

கல்
சிலையாக மாறுவது
சிற்பியின் கண்களால்..

சொல்
கவியாக மாறுவது
கவிஞனின் கண்களால்..

எல்லாம்...
கண்களைப் பொறுத்ததே

இங்கே...
ஒல்லிப்பிச்சான்கள்
குரங்கு மூஞ்சிகள்
பன்னி மூஞ்சி வாயென்கள்
எனச் சொன்னோரெல்லாம்
எங்கேயோ போய்விட்டார்கள்

ஆமாம்...
நாம் எங்கே போகிறோம்....?!!
ஓ..
அவர்களோடு நிழற்படம் எடுக்கவா?!

No comments: