01/08/2019

1994-1995, பத்தாம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி




1994-1995
பத்தாம் வகுப்பு
அரசு உயர்நிலைப் பள்ளி (த-மேல்நிலை)
மருதுபாண்டியர் நகர்
சிவகங்கை

செ. இராசமாணிக்கமாகிய நான்...
அன்றைய நினைவுகளை
இன்று(ம்) அசைபோட்டேன்...
ஒவ்வொரு வகுப்பறையிலும்
ஒவ்வொரு காட்சிகள்...

இக்கால நிஜத்தோடு
அக்கால நினைவுகள்
இரண்டும் மோதியதை
எப்படிச் சொல்லிடுவேன்?!
உடம்பெல்லாம் புல்லரிப்பு!
உயிரெல்லாம் மெய்சிலிர்ப்பு!

நானூறே எட்டாத பள்ளியில்
நான் தாண்டிய நானூறு
இன்றும் தொடர்வது
இரட்டை மகிழ்ச்சியே!!!

மனைவியோடும் மக்களோடும்
படித்த பள்ளியைப்
படிப்படியாய்க் காட்டியே
நெகிழ்ந்த நிமிடங்களை
நெஞ்சில் சுமக்கின்றேன்....

✍️செ. இராசா

No comments: