31/08/2019

#தமிழே_வா- இடையூறு செய்யாத எழுத்தை

#தமிழே_வா
*************
இடையூறு செய்யாத எழுத்தை
தடையேதும் இல்லாமல் தா- தமிழே
உடைகட்டி உரையாடும் எழுத்தை
தடைபோட்டு தடுத்தாள வா!

நடைமாற்றி நடிக்கின்ற உறவை
விடையின்றி வெளியேற்ற வா- தமிழே
எடைபோட்டு பார்க்கின்ற உறவை
மடைபோட்டு மறித்தாட வா!

கடையேழு வள்ளல்கள் மனத்தைக்
கொடையாகக் கொடுத்தாள வா!-தமிழே
குடைபோல காக்கின்ற குணத்தை
அடைகின்ற ஞானத்தைத் தா!

✍️செ. இராசா

No comments: