14/08/2019

கூவிக்கூவி வித்தாலும் கூட்டம் இன்னும் கூடலை!



கூவிக்கூவி வித்தாலும்
கூட்டம் இன்னும் கூடலை!
கூப்பாடு போட்டாலும்
கூறு கட்ட முடியல!

எல்லாருக்கும் சீட்டு தந்தும்
கல்லா கட்ட முடியல!
எல்லாருமே முழிச்சதால
சில்லறைக்கும் வழி இல்லை!

ஐயோ என்ன கொடுமையின்னு
குய்யோ முய்யோன்னு கத்துறான்!
வரவே இன்னும் வல்லையின்னு
வயித்து வலியில் துடிக்கிறான்!

வீட்டுக் கொரு இஞ்சினியர்
வீட்டைக் காவல் காக்குறான்!
வேலை வெட்டி கிடைக்காமல்
வெட்டி வேலை பார்க்குறான்!

✍️செ. இராசா

No comments: