26/08/2019

குறள் அந்தாதி--எண்ணத்தை


எண்ணத்தை ஆராயும் எண்ணப் பயிற்சியால்
வண்ணமாய் மாறுமே வாழ்வு!
(1)

வாழ்வை வளமாக்கும் மாண்பு தெரிந்திட
ஆழ்மன எண்ணத்தை ஆய்!
(2)

ஆய்ந்து
ம் அறிந்தும் அடிமன ஆசைகள்
பாய்ந்து வருவதைப் பார்!
(3)

பாரில் அனைத்தையும் பற்றிடும் ஆசையை
வேரின் அடியினில் வெட்டு!
(4)

வெட்டிய பின்னும் வெளிவரும் கோபத்தைக்
கட்டுமே யோகக் கலை!
(5)

கலையாய் மனத்தின் கவலையை நீக்கி
மலையாய் மதியினை மாற்று!
(6)

மாற்றம் வெளியில் வருமென எண்ணாது
மாற்றிட உன்னுள் முயல்!
(7)

முயன்று முயன்று முனைப்புடன் சென்றால்
முயலையும் வெல்லும்:ஆ மை
(8)

ஆமைகள் வந்தால் அழிவோம் என்பதால்
தீமையைக் கொன்றே அழி!
(9)

அழிவதும் ஆவதும் ஆகூழ் பொறுத்தே
விழிப்புடன் செய்வாய் வினை!
(10)

✍️செ. இராசா

No comments: