25/08/2019

#மரத்தின்_கேள்வி?!



கான்கிரீட் காட்டுக்குள்
காலூன்றி நிற்கின்றேன்!

தலையில் வெயிலேற்றி
நிழல்காக்க முயல்கின்றேன்!

பற்றிய தீப்பிழம்பாய்
பற்றாமல் கொதிக்கின்றேன்!

நகர புகைக்குள்ளே
நகராமல் வேகின்றேன்!

காலம் முடியும்வரை
காய்வதுதான் எம் விதியோ?!

ஞானப் புத்தர்களே...
ஞால அறம் இதுதானோ?!

#மரத்தின்_கேள்வி?!

No comments: