26/08/2019

#நாநலம் (குறளிள் குரலில்)


நாவெனும் ஆயுதம்
..................கொண்டேதான்
நாட்டினை ஆள்பவர்
..................ஆள்கின்றார்!
#வாய்மையை வசதியாய்
..................மறந்தேதான்
வாய்மெய் மௌனித்து
..................சிரிக்கின்றார்!

நாநலம் காத்திட முயல்வோர்தான்
நாணயம் பெருக்கி வாழ்கின்றார்!
நாநயம் விரும்பும் நல்லோர்தான்
நாணய நட்பால் சிறக்கின்றார்!

#பயனில_சொல்லாப்
.................... பெரியோர்தான்
நயமாய் #இன்சொல்
.....................சொல்கின்றார்!
#புறங்கூறா குணத்தைக்
.....................கொண்டோர்தான்
அறங்கூறும் குணத்தால்
................... வெல்கின்றார்!

✍️செ. இராசா

No comments: