13/08/2019

#அன்பின்_உச்சம்



என்னுள் நெருப்பை மூட்டிவிட
கண்ணில் தீப்பொறி தந்தவளே...
பற்றிய நெருப்பைப் படரவிட்டு
பற்றிட ஏன்தான் மறுத்தாயோ?!!

அணைக்க மறந்த தேகத்திலே
அணையா தீபம் ஏற்றியுள்ளேன்..
என்னுள் உன்னைக் கண்டிடவே
என்னை எண்ணெய் ஆக்கியுள்ளேன்

உன்னை நீயே காண்பதற்கு
என்னை நீயும் காண்பாயா?!
என்னை நானும் சேர்வதற்கு
உன்னை நீயும் தருவாயா?!

#அன்பின்_உச்சம்

(வள்ளுவர் திங்கள் நிகழ்வுக்காக எழுதியது

No comments: