20/08/2019

கற்றதால் என்ன பயன்?



பாரதி வரிகளைப் பருகிவிட்டு
பாரினில் சாதியம் பார்ப்பானும்;
ஆயிரம் அறநூல் படித்துவிட்டு
வாயினில் சாதியம் பறைவோனும்;

அத்தி வரதரைத் தொழுதுவிட்டு
நித்தியாய் நடந்திடும் ஆத்திகனும்;
சத்திய சீலனாய்ப் பேசிவிட்டு
புத்தியை மாற்றிடும் நாத்திகனும்;

மனவளக் கலைகள் பயின்றுவிட்டு
குணங்களை செதுக்கா மாணவனும்;
ஒழுக்க போதனை சொல்லிவிட்டு
வழுக்கியே வாழ்கிற ஆசிரியனும்:

கற்றதால் என்ன பயன்?

செ. இராசா

No comments: