13/08/2019

கண்ணான கண்ணா....



கண்ணான கண்ணா
என்னோட மன்னா
என்னோடு பேச வா...
கண்ணாலே என்னைக்
களவாடும் மன்னா
கண்ணாலம் கட்ட வா...

நீ மேகம் என்றால்
நான்பூமி ஆவேன்
நீர் தூவ ஓடி வா

நான் காத்து நிற்பேன்
நீ சேரும் காலம்
என் காதல் தோற்குமா?!

பன்னீராய் மேகம் தூறும்
பாசம் கூடும்
கண்ணாலம் கூடுமா?!

வாராயோ அன்பே
அன்பே அன்பே வாரோயோ அன்பே
வாராயோ அன்பே அன்பே
வாராயோ அன்பே (2)

✍️செ. இராசா

(ச்சும்மா...😊😊😊)

No comments: