20/08/2019

#அழகுக்_கருப்பா.... அழகுக் கருப்பா...



#அழகுக்_கருப்பா.... அழகுக் கருப்பா...
விழியின் வலைக்குள் விழுந்த கருப்பா..
அழகுக் கருப்பா.... அழகுக் கருப்பா.
உயிரின் அணுவில் உலவும் கருப்பா..

நிசமாய் நீயும் வந்ததாலே
பசலை நோயும் கருமையாச்சோ?
இருந்து என்னை ஆள்வதாலே
குருதி என்னுள் குளிர்ந்துபோச்சோ?

ஒன்றும் ஒன்றும் சேர்ந்த பின்னும்
ஒன்றாய் மாறும் விந்தை இதுவோ..?!!

தமிழாய் நீயும் வந்ததாலே
தனிமை எல்லாம் கவிதையாச்சோ?!
மொழியாய் என்னை ஆள்வதாலே
மொழிவதெல்லாம் கானமாச்சோ?!

ஒன்றும் ஒன்றும் சேர்ந்த பின்னும்
ஒன்றாய் மாறும் விந்தை இதுவோ..?!!

✍️செ. இராசா

பட உதவி: கிராமத்து வெ. வயிரவன் நன்றி ஐயா

No comments: