18/02/2019

அவளே மருந்து (குறளின் குரலாய்)




விழியில் விழிமோதி
விழித்த என் ஆண்மை
துளிர்த்த அவ்வேகம் கண்டு- நான்
விழித்தேன் அது யாது என்று?

கண்ணில் உருவாகி
நெஞ்சில் இடம்மாறி
புயலாய் உருமாறக் கண்டு- நான்
புரிந்தேன் அது காதல் என்று..

கொதிக்கும் தனலாகி
தகிக்கும் என் காதல்
விருப்ப விதைதூவக் கண்டு- நான்
வியந்தேன் அது நோயோ என்று...

வருந்தும் நோய் தீர
மருந்தை நான் தேட
அவளே மருந்தென்று கண்டேன்- நான்
அவளை அவளாலே வென்றேன்...

✍️செ. இராசா

No comments: