08/02/2019

கண்ணே பாருடா



கண்ணே பாருடா- என்
கண்ணே பாருடா
உன்னைப் பெத்தவர
என்னான்னு கேளுடா?

மாசம் முடியுமுன்னே
மாசமாக்கிப் போனவர
பாசம் இருந்தாக்க
பார்க்க வரச்சொல்லுடா..

பாப்பா வருமுன்னே
பாஃரினுக்குப் போனவர
வாப்பா நீ தான்னா
வாப்பான்னு சொல்லுடா

வருசம் முழுவதுமே
வாட்சப்பில் வந்தவர
எப்போ வருவேன்னு
இப்போதே கேளுடா..

✍️செ. இராசா

No comments: