17/02/2019

காதல் சாலை----143வது களஞ்சியம் கவிதைப் போட்டி--வெற்றிக் கவிதை

143வது களஞ்சியம் கவிதைப் போட்டி
***********************************
கிடைத்த இடம்: முதலிடம்
நடுவர்: திரு. கோபிநாத் அவர்கள்
அமைப்பு: தமிழ்ப்பட்டறை
தலைவர்: திரு. சேக்கிழார் ஐயா
🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼

காதல் சாலை
**************
கண்களில் தொடங்கிய பயணம்
நெஞ்சினைத் தொடுகிற போது
கண்களில் உறக்கம் போகும்!
நெஞ்சினுள் குழப்பம் சேரும்!

உள்ளத்தில் தொடர்கிற பயணம்
உதிரத்தில் கலக்கிற போது
உணவுகள் இறங்கிட மறுக்கும்!
உணர்வுகள் கிறங்கிட வைக்கும்!

உணர்விலே தொடர்கிற பயணம்
உயிரிலே கலக்கிற போது
உள்ளுக்குள் உலகம் சுழலும்!
உயிருக்குள் உறுப்புகள் உளறும்!

எண்ணத்தில் தொடர்கிற பயணம்
எங்குமே பரவிடும் போது
எழுத்துகள் கவிதையாய் மாறும்!
எவரையும் கவிஞனாய் மாற்றும்!

காதலில் தொடர்கிற பயணம்
மோதலில் முடிகிற போது
வேதனை வெடியெனக் கொல்லும்!
ரோதனை அதுவெனச் சொல்லும்!

வலிகளில் தொடர்கிற பயணம்
வழியினை மாற்றிடும் போது
நெஞ்சிலே ஆனந்தம் கொள்ளும்!
கண்ணிலே காதலைச் சொல்லும்!

✍️செ. இராசா


https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2245601405758763?sfns=mo 

No comments: