01/02/2019

மௌனமே ஆனந்தம்------141வது கவிதைப்போட்டியில்-வெற்றிக் கவிதை

141வது கவிதைப்போட்டியில்
இரண்டாமிடம் பிடித்த கவிதை இது.




மௌனமே ஆனந்தம்
*******************
உதடுகள் பேசா மௌனத்தில்
உள்ளம் பேசுதல் ஆனந்தம்!
உள்ளமும் பேசா மௌனத்தில்
உள்ளது உண்மையில் ஆனந்தம்!

இதழ்கள் பேசிடும் நேரத்தில்
இதயத்தின் வார்த்தை கேட்பதில்லை
இரைச்சல் இருக்கும் இதயத்தில்
இறைவனின் வார்த்தை கேட்பதில்லை

ஒன்றில் ஒன்றாய் ஒன்றுகின்ற
ஒன்றை நன்றாய்க் கற்றிடுவோம்!
உலகில் தன்னை இணைக்கின்ற
உன்னத மௌனம் பழகிடுவோம்!

சூனிய ரகசியம் அறிகின்ற
சூட்சுமம் யாதென அறிந்திடுவோம்!
சுழலும் உலகை வெல்கின்ற
சூத்திரம் அதுவெனத் தெரிந்திடுவோம்!

எச்சில் படாத மொழிகொண்டு
எண்ண மொழியில் பேசிடுவோம்!
எங்கும் நிறைந்த இறைமொழியை
ஏகாந்த நிலையில் கேட்டிடுவோம்!

என்ன மொழியாய் இருந்தாலும்
எண்ண மொழியே உயர்வாகும்!
ஆதி மொழியாய் இருந்தாலும்
அமைதி மொழியே சிறப்பாகும்!

#மௌனம்_பழகு

✍️செ. இராசா

https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2237821849870052/

No comments: