25/02/2019

இல்லறம் என்பது யாதெனில் --#குறளின்_குரலில்



அறத்தைப் போற்றா மனிதர்களும்-இந்த
அகிலத்தில் சுகமாய் இருக்கையிலே
அறத்தைப் போற்றிடும் நல்லவரே-நீர்
அறமாய் வாழ்வதில் யாதுபயன்?!

ஊழின் வினையால் வாழ்பவரை-ஒரு
உதாரணம் என்றே கொள்பவரே
அறத்தின் பயனல்ல பேரின்பம்?!-நாம்
அறமாய் வாழ்வதே பேரின்பம்!

இல்லறம் ஒன்றே போதுமெனில்- இனி
இன்னொரு அறமும் எதற்கன்றோ?!
இல்லறம் துறவறம் இரண்டிலுமே-இங்கு
இல்லறம் எதனால் சிறப்பன்றோ?

அன்பும் அறமும் விரிவடைய-இங்கு
அடுத்த அறமும் தேவையன்றோ?!!
இல்லறம் மட்டும் இல்லையெனில்-இங்கு
இரண்டாம் அறமே இல்லையன்றோ?

✍️செ.இராசா

#குறளின்_குரலில்

இல்லறத்தான் போற்றிப் பாதுகாக்க வேண்டிய 11 நபர்கள் யார் யார்? என வள்ளுவர் கூறுகிறார்

1. பிள்ளைகள் (பிரம்மச்சாரி)/Kids
2. பெற்றோர்கள் (வானபிரபஸ்தர்)/Parents
3. கணவன்/ மனைவி/Better half
4. துறவிகள்/ துறக்கப்பட்டவர்/ Monk/ refused one
5. வறியவர்/ poor
6. நம் வீட்டின் முன் இறந்தவர்கள்/ Died one in front of house
7.தென்புலத்தார்(முன்னோர்கள்)/ Ancestor
8. தெய்வம் (குலதெய்வம்)/ God
9. விருந்தினர்கள்/ Guest
10. சுற்றத்தார்கள்/ Relatives
11. தான்/ Self

No comments: