07/02/2019

அரபி நபர்.... ஆச்சரியப் பூச்சொறியும் அற்புத மனிதர்..



அதிகாரக் குவியல்
அதி காரமாய்த்தான் இருக்கும்..
அந்த இடமும்
அப்படித்தான் இருந்தது
அன்று வரை...
அந்த நபர் வரும் வரை...

ஆனால் இப்போது
அதிகாரம் இருந்த இடத்தில்
அகங்காரம் இல்லை..
அறைவாசல் வாசகங்களில்
அனுமதி மறுப்பு இல்லை..

அவரின் முன்னே
அனைவரும் அமர முடிகிறது...

அனைவருக்கும் குழம்பி வருகிறது..
அதுவும் அவர் கையால்..

ஆச்சரியமாய் இருக்கிறது
அது அந்த பழைய இடம்தானா?!!

ஆம்..
அனைவரும் இப்படி
அசத்தி விடுவதில்லை...
அனைவரும் இப்படி
ஆச்சரியம் தருவதில்லை..

அடித்துச் சொல்வேன்
அவரைப்போல் இங்கே
அவர் மட்டுமே...

அணு அணுவாய் ரசித்த
அந்த அரபி நபர்....
ஆச்சரியப் பூச்சொறியும்
அற்புத மனிதர்..

அறிவின் மிகுதியிலும்
அதிகார மிகுதியிலும்
ஆடுவோர் பலரிருக்க,
அனைத்தும் இருந்தாலும்
அகத்தில் ஏற்றாத
அவர் மட்டுமல்ல...
அனைத்து நபர்களும்
ஆண்டவனின் பிள்ளைகளே....

🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ. இராசா

No comments: