08/02/2019

நினைக்கும்முன் மறப்பேனா?!


மனமெல்லாம் நீதானே-நான்
மனம்நோகச் செய்வேனா?!
மதியெல்லாம் நீதானே-நான்
மதிக்காமல் இருப்பேனா?!

மணமெல்லாம் நீதானே- நான்
மலர்தேடிப் போவேனா?!
கவி(😊)யெல்லாம் நீதானே- நான்
கவிபாடிக் கொள்(ல்)வேனா?!

தமிழெல்லாம் நீதானே-நான்
தனிமையிலே நிற்பேனா?!
குறளெல்லாம் நீதானே- நான்
குரல்மாற்றிக் கதைப்பேனா?!

இசையெல்லாம் நீதானே-நான்
இசைக்காமல் இருப்பேனா?!
நினைவெல்லாம் நீதானே-நான்
நினைக்கும்முன் மறப்பேனா?!

No comments: