20/02/2019

பிறந்தநாள் வாழ்த்து---ஏபிஎஸ்



அடிக்கடி இடம்மாறும்
ஓபிஎஸ்ஸோ ஈபிஎஸ்ஸோ அல்ல அவன்
எல்லோரையும் ஏற்றிவிட்டு
எப்போதும் மனம் மகிழும்
ஏபிஎஸ்ஸே அவன்...

கல்லூரி நினைவுகள் எல்லாம்
கண்முன் வருகின்றன...இதில்
எதைச் சொல்வேன்?!
எதை விடுவேன்?

“படித்துவிட்டு என்ன ஆகப்போகிறாய்?”

இது என்ன?!
நா. முத்துக்குமார் கவிதைபோல்
ஆம் அதே கேள்விதான்
பிஇ இரண்டாம் ஆண்டில்
நாங்கள் கேட்டுக்கொண்டோம்...

அனைவரும் ஏதேதோ சொன்னார்கள்
ஆனால்,
அவன் மட்டும் இப்படி சொன்னான்...
“வாழ்க்கையின் ஓட்டத்தில் பயணிப்பேன்” என்று...

குறிக்கோள் இல்லாதவனின்
வாக்குபோல் நினையாதீர்....
குறிதவறாமல் காலத்தைக் கணித்த
ஞானவானின் வாக்கு அது...
ஆம் அது என் நண்பனின் வாக்கு..

சொன்னதுபோல் செய்யும் அற்புதம் அவன்
அசுர வளர்ச்சியிலும்
அமைதியாய் சிரிக்கும் அதிசயம் அவன்...
அது மட்டுமா?!!
அன்று திசைமாறிய என் பயணத்தை
திருப்பிவிட்ட கலங்கரை விளக்கு அவன்

மொத்தத்தில் என் நண்பன் அவன்...

அவனுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் என்றும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

மனமார்ந்த நன்றி நண்பா!!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இடப்பக்கம் நண்பர் பிரதீஸுடன், வலப்பக்கம் நண்பர் செந்தில் குமாருடன் நான்.

No comments: