16/02/2019

அசிங்கமான வார்த்தைகளில்



அசிங்கமான வார்த்தைகளில்
அருவருப்பாய் எழுதிவிட்டால்
ஆத்திரங்கள் அடங்கிடுமா?!- இல்லை
ஆக்ரோசமான வார்த்தைகளில்
அனைவரையும் உசுப்பிவிட்டால்
அனைத்தும் சரியாகிடுமா?!

தன்கட்சித் தலைவன்
தவறாகச் சொன்னாலும்
தன்போக்கும் அதுதானா?!- இல்லை
தனக்குப் பிடிக்காதவன்
தவறின்றி நடந்தாலும்
தன்போக்கில் திட்டனுமா?!

மதங்களில் மூழ்கியவன்
மதியின்றி செய்ததற்கு
மதச்சாயம் பூசணுமா?!- இல்லை
மக்களை உசுப்பிவிடும்
மதவெறிச் செயலுக்கு
மடைபோட்டுத் தடுக்கணுமா?!

No comments: