05/02/2019

முடியாதது எதுவுமில்லை



உயரத்தை அடைகிற ஆவலிலே
உலகத்தில் பலபேர் முயன்றாலும்
உள்ளத்தில் வலுவுள்ள வல்லவரே
உயரத்தை எளிதில் அடைகின்றார்!

ஒன்றை நன்றாய்க் கற்றறிந்து
ஒன்றின் வழியே சென்றாலும்
என்றும் புதிதாய்க் கற்பவரே
என்றும் வெற்றியில் நிற்கின்றார்!

தந்திர வழியினில் செல்லாமல்
தன்திற வழியினில் செல்பவரே
தன்தரம் யாதெனச் சொல்கின்றார்!
தன்னறம் அதுவென வாழ்கின்றார்!

முயற்சியில் அயர்ச்சி கொள்ளாது
முயலை ஆமை வென்றதுபோல்
முயலும் நபரே வெல்கின்றார்!
முன்னே நோக்கிப் பாய்கின்றார்!

#முயன்றால்_முடியாதது_எதுவுமில்லை

✍️செ. இராசா

No comments: