22/02/2019

அப்பத்தா



தென்கரை மண்ண விட்டு
தெக்கால வாக்கப்பட்டு
அஞ்சு பொண்ணு இரண்டு ஆணு
அத்தனையும் பெத்து போட்டு
அம்மன் பட்டி ஊருக்குள்ள
அரசாண்ட அப்பத்தா-நீ
........மாணிக்கம் ஐயா தேடி
........மலேசியா போனபோது
........வாசலில் கோலமிட
........மாட்டுச் சாணம் தேடியத
........எப்பவும் சொல்வாயே
........இப்ப யாரு சொல்லிடுவா?!

அப்பா அடிச்சாக்க
அப்பாவ திட்டிடுவ
அம்மா அடிச்சாக்க
அடியேன்னு வஞ்சிடுவ
ராசா ராசான்னு
காசெல்லாம் தந்திடுவ
........நல்லா வரனும்னு
........மனசார வேண்டிக்குவ..
........ஐயோ....அப்பத்தா-நீ
........செத்த பொழுதுகூட- உன்
........சாவுக்கு நான் வல்ல
........ஏதோ காரணத்தை
........என்னான்னு சொன்னாலும்
........இப்ப நினைச்சாலும்
........என்னைத்தான் வஞ்சிடுவேன்
நல்ல வாழ்க்கையின்னு
நாலுபேரு சொன்னாலும்
என்ன வாழ்க்கைன்னு
எனக்குள்ள கேட்டுக்குவேன்...
..............
..............
அப்பத்தாவின் நினைவோடு...
அன்புப் பேரன்
செ. இராசமாணிக்கம்
அம்மன் பட்டி

No comments: