23/05/2017

களிமண் பொம்மை



மகள் செய்த பொம்மையதின்
மனம் சொல்லும் சேதிகேளீர்;

இளஞ்சிவப்பு நிறத்திலோரு
பெண் பொம்மை

நீல நிறத்திலொரு
ஆண் பொம்மை

எப்போதும்
இவை இரண்டும்
இணைந்தேதான் இருக்கனுமாம்!
இல்லையெனில்
இவள் கண்கள்
விழி நீரால் நனைந்திடுமாம்!

அப்பப்பா! என் சொல்வேன்?!
பிரிவின் வலி
அது கொடுமை

அக்கொடுமை செய்திடவே
அப்பாவும் நினைப்பேனோ?!

சில நிமிடம் கழிந்ததுமே......
இரு பொம்மை ஒன்றாக
இணைத்துவிட்டாள்
என் குழந்தை!

விதி வலிமை
இது உண்மை
யார் தடுக்க முடியுமடா?

களிமண்ணில் வந்த பொம்மை
களிமண்ணாய் ஆனதடா!!

இறை செய்யும் அற்புதத்தை
இவள் செய்து காட்டிவிட்டாள்!

No comments: